லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

எப்போதும் துணிச்சலுடன் கருத்துகளை வெளியிடுகிறவர் கங்கனா ரணாவத். அவர் வெளியிடும் கருத்துகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்துகளோடு ஒத்து போவதால் அவரை பா.ஜ.,வின் ஆதரவாளர் என்ற கருத்தும் உண்டு. அதோடு மஹாராஷ்ராவில் ஆளும் சிவசேனா கட்சி மீது துணிச்சலான விமர்சனங்களை முன்வைத்தவர். மும்பைக்குள் நுழைய விட மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் மிரட்டியபோது அதை மீறி கெத்தாக வந்து இறங்கியவர்.
இந்த நிலையில் வருகிற பார்லிமென்ட் தேர்தலில் அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த தேர்தலின்போதே அவரை தேர்தலில் நிறுத்த பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தது. அவர்தான் பிடிவாதமாக மறுத்து விட்டார். ஆனால் இந்த முறை போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். அதனை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலுக்குச் சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு அவரை சந்தித்த செய்தியாளர்கள் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டனர். அதற்கு அவர் “கிருஷ்ணர் அருள் புரிந்தால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்” என்று பதிலளித்தார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் “பா.ஜ., அரசின் முயற்சியால் 600 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு மகத்தான நாளை காணப் போகிறோம். கொண்டாட்டங்களுடன் கோயில் திறப்பு விழா நடைபெறும். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும். துவாரகை ஒரு தெய்வீக நகரம். இங்குள்ள அனைத்தும் அற்புதம். ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார். அவரைக் காணும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன். இறைவனை தரிசனம் செய்ய நான் எப்போதும் இங்கு வர விரும்புகிறேன், என்றார். கங்கனா அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.




